Thursday, March 26, 2009

'அந்த நேரத்து' ரகசியங்கள்!


ஒவ்வொரு மனைவியும் தங்கள் கணவன்மாரிடம் சிலவற்றை விரும்புகின்றனர். இருவரும் தனித்திருக்கும் அந்தரகமான அந்த நேரத்திலும் 'அந்த மாதிரியான' ஆறு ரகசியங்களை பாலியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் . ஆண்கள் அவற்றை அறிந்து கொண்டால் கை மேல் பலன் கிடைக்கும் .

அன்பான உர்ரையாடல்கள்:
அன்பான் உரையாடல் எந்த பெண்ணையும் நெகிழ்த்திவிடும் .பெண்களை பொறுத்தவரை அவர்களுக்கு செக்ஸ் விட அனுசரணையான பேச்சும் அன்பாக உணர்வதும் முக்கியம் . குறிப்பாக தினசரி நெருக்கடியான பணிகளில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு இம்மாதிரியான அனுசரனய்யான வார்த்தைகள் மகிழ்ச்சி தருகின்றன .கணவருடன் ரிலாக்சான நிலையில் மனம் விட்டு பேசுவது அவசியம் மனைவிக்கு மிகவும் இதமாக இருக்கும்.அந்த நேரத்தில் கணவன்மனைவி மகிழ்வுமாறு பேசுவது அவசியம் .மனைவி எவ்வளவு அழகாக இருக்கிறாள் ,தான் எந்தளவு நேசிக்கிறேன் என்று அவளின் காதுக்குள் கிசுகிசுப்பது கிளர்ச்சி உட்டும்

அழகை போற்றுவது :
'நான் நிறைய 'வெயிட்' போட்டுட்டேன்...என்னோட அழகை அவர் கண்டுக்காத போது நான் எப்படி இருந்தா என்ன?'என்று அலுத்துக்கொள்ளும் பெண்கள் அநேகம் .ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு இருக்கும் . ஆனால் எல்லா மனைவியருமே தங்கள் கணவன் தங்கள் அழகை புகழவேண்டும் எதிர்பார்க்கிறார்கள் .அதற்காக மனைவியை 'நீ தேவதை மாதிரி இருக்கே ' என்று 'ஓவராக' புகல வேண்டியதில்லை . 'அழகுக்கும்
உனக்கும் என்ன சம்மந்தம் என்று போட்டு தாக்கவும் கூடாது .மனைவியின் அழகான அம்சத்தை குறிப்பிட்டு பாராட்டலாம் .'உன்னோட கண்ணழகு யாருக்கு வரும் ?, "உன்னோட உதட்டலகுக்கு முன்னால ஏன்சளினா கூட பின்வாங்கனும்' என்று கூறலாம் .
படுக்கையறைக்கு வெளியிலும் ....
பெண்கள் இதயபூர்வமாக செயல்படுபவர்கள் .அவர்களை பொறுத்தவரை வாழ்வில் ஒவ்வொரு விசயமும் ஒன்றையொன்று சார்ந்தவைதான் .படுக்கையறையில் திருப்தியான 'உறவு' க்கு பெண்கள் நல்ல மனநிலையில் இருப்பது அவசியம் .நாள் முழுவதும் நல்ல விதமாக ஒவ்வொருவரு ஒவ்வொரு .முறையும் ஒவ்வொரு ஒவ்வொரு இருப்பது ,ஒவ்வொரு வார்த்தைகளை உபயோகிப்பது ,மோசமாக விமர்சிப்பது போன்றவை படுக்கையறையில் எதிரொலிக்கும். திடீரென்று ஒருநாள் அலுவலகத்திளிர்ந்து சீக்கிரமாக வீட்டுக்கு வருவது ,குறிப்பிட்ட காரணம் என்றில்லாமல் 'சர்பிரைஸ்பரிசு ' கொடுப்பது மனைவியை குசிப்படுத்தும் .இன்னும் அதிகமாக இணக்கம் காட்ட வைக்கும்.

உச்சக்கட்டம் :ஒவ்வொரு முறையும் மனைவியை உச்சக்கட்டம் அடைய வைப்பதுதான் திறமையான கணவனுக்கு அடையாளம் என்று பெரும்பாலான ஆண்கள் நினைக்கிறார்கள் .அது அமைந்தால் நல்லது தான் .ஆனால் எப்போதும் அவசியமில்லை ,உறவில் பாதிக்கு மேற்பட்ட தடவைகள் அறுபது
சதவீதம் பெண்களே உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிக்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன .அதை எட்டுவதற்காக துணையால் ,அல்லது தளங்களுக்கு தாங்களே நிர்பந்திப்பது தான் பல நேரங்களில் நடக்கிறது .உச்சக்கட்டத்திலேயே குறியாக இருப்பது ,வழியில் காணும் அழகிய காட்ச்சிகளை ரசிக்காமலே அடைய வேண்டிய இடத்தை பற்றிய கவனத்துடன் உல்லாச பயணம் செல்வது போல .
விளையாட்டு :
அனேக ஆண்கள் செக்ஸ்ன் போது சிரியசாகவே இருக்கின்றனர் .சிரிப்பதில்லை ,சிறு சிறு எல்லை மீறல்கள் ,விளையாட்டு சீண்டல்களில் ஈடுபடுவதில்லை .'விளையாட்டு தனம் 'தனிமை நேரத்தை இனிமைபடுத்தும் .'நன்றாக அமையவேண்டுமே என்ற கவலையை யும் இருவரிடமிருந்தும் அகற்றும்.
'சைவமான 'தொடுகை :
பெண்களுக்கு 'ரொமான்ஸ்' பிடித்தமான விஷயம் .கணவன்மார்கள் செக்ஸ் 'அதற்க்கு முந்தய விளையாட்டுகளின் போது தவிர மாற்ற நேரங்களில் தங்களை தொடுவதில்லை என்பது பெரும்பாலான பெண்களின் புகார் .ஒரு திடீர் அணைப்பு ,திடீர் முத்தம் பெண்களை மலர்த்தும் .'அசைவம்' அல்லாத தொடுகையில் கூட அவர்கள் சந்தோசம் உணர்வார்கள் .

இந்த பதிப்பை குடும்ப மலரில் படித்தேன் வெளியிட்டேன் நன்றி குடும்ப மலர் .



1 comment:

  1. Hi,

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

    இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

    நட்புடன்
    nTamil குழுவிநர்

    ReplyDelete