Sunday, March 29, 2009

மனிதகுரங்கு

'சிம்பன்சி' என்ற மனிதகுரங்கின் நடவடிக்கைகளை பார்த்தால் ஒரு மனிதனை போலவே இருப்பதற்கு என்ன காரணம் ?

'சிம்பன்சிகுரங்கு 99 சதவீதம் மனிதன் . மனிதனின் மரபணுக்களையும் (DNA) ஒரு சிம்பன்சியின் மரபணுக்களையும் ஒப்பிட்டு பார்த்த உயிரியியல் சைண்டிஸ்ட் அசந்து போனார்கள் .காரணம் இரு மரபணுக்களும் 99 சதவீதம் ஒரேமாதிரியாய் இருந்தது தான்! மனிதனையும் ,மனிதகுரங்கையும் வேறுப்படுத்தி காட்டுகிற மீதி ஒரு சதவீதம் எது என்பதை கிளறி பார்க்க ஆரம்பித்தார்கள் .அதற்காக ஒரு சோதனை குழாயில் மனிதனின் மரபணுக்களையும்,மனிதகுரங்கின் மரபணுக்களையும் ஓன்று சேர்த்து ஒரு உயிரை உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் .வெற்றிகிடைப்பது போல் தோன்றி பிறகு அது தோல்வியில் முடிந்தது .
தோல்விக்கு காரணம் அந்த ஒரு சதவீத வித்தியாசம் தான் .இந்த வித்தியாசமே நம்மையும் மனிதகுரங்கையும் பெரிய இடைவெளியில் பிரித்து வைத்து இருக்கிறது .குரங்கு குரங்கு தான் ! மனிதன் மனிதன் தான் ....! காரணம் ,மனித குரங்கின் மரபணுக்கள் மொத்தமும் 48 குரோமோசோம்களில் அடங்குகின்றன. ஆனால் மனிதனின் மரபணுக்கள் 46 குரோமோசோம்களில் அடங்கிவிடுகின்றன .
நல்ல வேலை ....தப்பித்தோம் என்றீர்களா ?
நன்றி ராணி வார இதழ் .

No comments:

Post a Comment