Sunday, March 29, 2009

பெண்களே :தள்ளிபோடதீர்கள்

மாதவிலக்கு : தள்ளிபோடாதீர்கள்!
பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்ப்படுவது குறிப்பிட்ட வயது வரை தவிர்க்க முடியாது .பெண்களின் உடல்வாகை பொறுத்து ஒவ்வொருவருக்கும் மாதவிலக்கு காலம் மாறுபடலாம் .
ஆனால் ,சில பெண்கள் மாதவிலக்கு முறையாக ஏற்படுத்துவதற்காக தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள் . இதே போல் சில பெண்கள் கோவிலுக்கு போக வேண்டும் என்பதற்க்காகமாதவிலக்கை தள்ளி போடும் மாத்திரைகள் சாப்பிட்டு பழகிவிடுகிறார்கள் .இன்னும் சில பெண்கள் தேர்வு நேரங்களிலும் ,வெளியிடங்களுக்கு செல்வதற்காக மாதவிலக்கை தள்ளிபோட மாத்திரைகளை எடுத்து கொள்கிறார்கள் .
இப்படி அடிக்கடி மாத்திரையை போட்டு அதையே தங்களுக்கு வழக்கமாகவும் ,பழக்க மாகவும் ஆக்குகிறார்கள் .இது நாளடைவில் கருப்பை பாதிப்பை உண்டாக்கும் .அதிக ரத்தபோக்கு ,மாதவிலக்கு சீராக வராமல் போவது போன்றவற்றை ஏற்படுத்தும் .
எனவே கூடுமானவரை மாதவிலக்கை தள்ளிபோடும் மாத்திரைகளை தொடர்ந்து போடுவதை பெண்கள் தவிர்ப்பது மிகவும் நல்லது .
நன்றி! ராணி வார இதழ் .

No comments:

Post a Comment