" சுதந்திர போராட்ட வேங்கை பகத் சிங்கின் அண்ணன் ரன்பீர் சிங். இவருடைய மகன் யோனான் சிங்,ராணுவத்தில் இருக்கிறார் .இந்திய அமைதிப்படை இலங்கை சென்றபோது ,அதில் முக்கிய வீரராக இருந்தார் .இவருக்கு மத்திய அரசு 'வீர' விருது அறிவித்தது .மகிழ்ச்சியுடன் அப்பாவிடம் சொன்னார் .ஆனால் அப்பா முகத்தில் மகிழ்ச்சியே இல்லை.
"இலங்கையில் தமிழ் இனம் உரிமை கோரி போராடுகிறது .நீ தெரிந்தோ தெரியாமலோ அமைதிப்படைக்கு ஒத்துளைத்துல்லாய் .இது மிக பெரியதவறு .இன விடுதலையை அடக்குவதற்காக தரப்படும் விருதை நீ வாங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை ,அப்படியே நீ விருது பெறுவதாக இருந்தால் ,நமக்குள் இனிமேல் எந்த உறவும் இருக்காது .விருதா உறவா ? என்பதை முடிவு செய்துகொள் "என்று ரன்பீர் சிங் கொந்தளித்து முடித்தார்.
யோனானுக்கு மனசு உறுத்தியது .மத்திய அரசின் விருதை மறுயோசனை இன்றி புறக்கணித்து விட்டார் .
No comments:
Post a Comment